Published Date: April 1, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பம் எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
அம்ரூத் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3க்கு உள்பட்ட விடுபட்ட பகுதிகளான 52,54, 55, 59, 61, 76, 70 ஆகிய வார்டு பகுதிகளில் உள்ள 6367 வீடுகளுக்கு மண்டலம் 4க்கு உள்பட்ட விடுபட்ட பகுதிகளான 47, 49, 53, 85, ஆகிய வார்டு பகுதிகளில் உள்ள 1,385 வீடுகளுக்கும் மொத்தம் ரூபாய் 5.25 கோடியில் குடிநீர் விநியோக குழாய்கள், வீட்டு இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மதுரை மாநகராட்சி மேயர் வ.இந்திராணி, ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் தலைமை வகித்தனர். மண்டலம் 3 ஒர்க்சாப் சாலை, கிருஷ்ணராயர் தெப்பம் கிழக்குத் தெரு பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் பிரபாகரன், மாநகராட்சி அலுவலர்கள், 4மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Media: Dinamani